Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் - மத்திய இணை அமைச்சர் பேச்சு 

மார்ச் 07, 2021 01:39

விருதுநகர் : ராஜபாளையம் பாஜக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்றார். முதற் கட்டமாக  மத்திய இணையமைச்சர் வி.கே சிங் வெற்றிவேல் வீரவேல் என்று கோஷங்கள் எழுப்பி பேச்சை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது பாஜக கடந்து 5 வருடங்களில் வளர்ச்சியடைந்துள்ளது.  
இன்று பாஜக தொண்டர்களிடத்தில் பார்க்கும் போது வெற்றி பெறும் விவேகம் காணப்படுகின்றது.

நாம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி பெற நாம் விரும்புகிறோம்.நான் கூட்டணியில் 100 தொகுதியில் பெற்று 10 தொகுதியில் வெற்றி பெற்று வந்தால், அதை மிகை கிடையாது. 50 தொகுதி பெற்று 25 வெற்றியானால் அது நம்மை கால் பதிக்கும். அடுத்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கான இந்த தேர்தல் ஒரு முக்கிய பரிச்சை என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்